Saturday, February 8, 2014

சுவிசேஷங்கள் புனைக்கதையா? வரலாறா? புராணக் கதைகளா?

கிறிஸ்துவ நண்பரிகள் பலர் மதம் பரப்ப கொடுத்த கட்டுரைகள் இணைப்புகள் இங்கே 1  இங்கே2  இங்கே3  இங்கே4  இங்கே5

மத்தேயு சுவிசேஷம் கதைப்படி பெத்லகேமில் தச்சராய் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப்-மேரி ஏசுவின் பெற்றோர்.
லூக்காவின் சுவிசேஷம் கதைப்படி நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்-மேரி ஏசுவின் பெற்றோர்.
 மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம் லூக்கா விருப்பப்படியான            சுவிசேஷம்
2:1ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்.2: 1 அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.3 தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.4 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,5 கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.6 அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.7 அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
  1:16யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு. 3:23 இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது; அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார். யோசேப்பு ஏலியின் மகன்
 1:19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ‘யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச  வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார்1: 26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, ‘அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்’ என்றார்.29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.30 வானதூதர் அவரைப் பார்த்து, ‘ மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்
மேலுள்ளதில் உள்ள சிறு விவரத்தை ஆராய்வோம்.
மாற்கு சிவிசேஷத்தில், முதலில் புனையப்பட்டது; பேதுருவின் சீடருக்கு இது தெரியாது. இயேசுவின் அன்புச் சீடர் எனப்படும் யோவான் சுவிப் புனையலிலும் கன்னி பிறப்பு இல்லை.
பேதுருவின் மரணத்திற்குப் பின் 64-67க்குப் பின் மாற்கு; ரோம் மன்னன் ட்ராஜான் (பதவி ஏற்பு- 98) ஆட்சியில் வரையப்பட்டது யோவான் சுவி. சீடர்களிடம் இக்கதை இல்லை என்பதை தெளிவாக உணர்த்தும்.

வரலாற்று உண்மை தேடும் பைபிளியல் ஆய்வுண்மைகள் என்னவென்பது:
The earliest witnesses wrote nothing' there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork

அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்.

மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் வேதாகமவிமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல் “The Real Jesus” பின்வருமாறு சொல்லுகிறார்-“ The Conclusion usually(and I think rightly) drawn from their comparative study is that the Gospel of Mark (or something like it) served as a source for the Gospels of Matthew and Luke, and that these two also had access to a collection of sayings of Jesus(conveninently called ‘Q’), which may have been complied as a handbook  for the Gentile mission around AD50.- P-25.

பெரும்பாலன ஆராய்ச்சியாளர்கள் கூறுவது, (என் கருத்தும்-அது சரி) மாற்கு சுவி(அல்லது அது போன்றது) கதையைக் கொண்டு, இத்தோடு இயேசு சொன்னவை எனப்படும் ஒரு 50 வாக்கில் எழுந்த குறிப்புகளும் கொண்டே மத்தேயு லூக்கா சுவி கதைகள் வளர்ந்தன.
   
இதே நூலில் பேராசிரியர் F F புரூஸ்
Whereas in the synoptic record most of Jesus’ ministry is located in Galilee, John places most of it in Jerusalem and its neighbourhood. –P.27 ஒத்த கதை சுவிகள் இயேசு பெரும்பாலும் கலிலேயாவில் சீடரோடு இயங்கியதாகச் சொல்ல, நான்காவது சுவி ஜானிலோ பெருமளவில் ஜெருசலேமிலும் யூதேயாவிலும் இயங்கியதாக என்கிறது.


Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய ஏற்பாடு பேராசிரியர்- ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்-
“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned.
4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கிய துகலிலேயாவி ல்என்றும், -ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின் போதுமட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும் -ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும். நான்காவது சுவி யோவேறுவிதமாக, முதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்-பின்னும் இயங்கியதாகவும்; எழாம் அத்தியாயத்திற்குப் பின்முழுமையாக ஜெருசலேமிலும் யூதேயாவிலும் எனச்சொல்கிறார், யோவன் 3:24- ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.
நாம் புரிந்து கொள்வது – சுவிசேஷக் கதாசிரியர்கள் இயேசு சீடர்களொடு இயங்கிய விவரங்களைக் கூட சரியாகத் தரவில்லை. 
மத்தேயுவின் ஜோசப்-மேரி யூதேயா நாட்டிலுள்ள பெத்லஹேமில் வாழ்ந்தவர்கள், தங்கள் வீட்டில் பிரசவம் நடந்தது.
லூக்காவின் ஜோசப்-மேரி கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தில் வாழ்ந்தவர்கள்,
1000 வருடம் முன்பு வாழ்ந்ததான முன்னோர் ஊரில் போய் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிரசவம் நடந்ததாம்.

சர்ச் மக்களிடம் முக்கிய சீடர் பேதுருவின் மொழிபெயர்ப்பாளர் எனவும், பவுலோடும் சுற்றுப்பயணம் செய்தவர் தான் மாற்கு என்கிறது. இவர் ஏசு கலிலேயா நாட்டிலுள்ள கப்பர்நகூம் பகுதியை ஏசுவின் வீடுள்ள பகுதி என்வும் கூறியுள்ளார்.
மேலே உள்ளதில் ஏதாவது ஒன்று உண்மையாக இருக்கலாம், அல்லது மூன்றுமே தவறாகவும் இருக்கலாம்.
நடுநிலை வரலாற்று உண்மை- சுவிஷேங்கள் –கதாசிரியர்கள் யார்?

தெரியாது; ஆனால் அவர்கள் ஏசுவை அறிந்தவர்கள் இல்லை.

இயேசுவும் அன்புச் சீடரும்
யோவான் 21:20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, ' ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? ' என்று கேட்டவர்.21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ' ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்? ' என்ற கேட்டார்.22 இயேசு அவரிடம், ' நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா ' என்றார்.23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ' நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன? ' என்றுதான் கூறினார்.24 இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும்.

ஏசு இரண்டாவது வருகை வரை அன்பு சீடர் உயிரோடு இருக்க வேண்டுமாம்- பழைய உடம்பில் மீன்டும் காட்சி தந்ததான ஏசு சொன்னாராம்

 இறந்த ஏசுவை தெய்வீகர் எனப் புனைய எழுந்த புராணங்களே

No comments:

Post a Comment